Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான்" - விஜய் குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

விஜய் சார் அப்படி நினைச்சிருந்தால் எனக்கு துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
07:56 AM Aug 25, 2025 IST | Web Editor
விஜய் சார் அப்படி நினைச்சிருந்தால் எனக்கு துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisement

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisement

அப்போது இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "நான் விழும்போது, எழும்போதும் கொடுக்கிற என் ரசிகர்களுக்கு, என் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. என் அப்பா பெயரும் தாஸ்தான். அவருக்கு முருகதாஸ் இயக்கிய ரமணா படம் ரொம்ப பிடிக்கும். இப்ப அவர் இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பார். 14 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பிளாஷ் பேக்கை இப்ப சொல்றேன். முருகதாஸ் இயக்கிய எழாம் அறிவு பட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க என்னை அழைத்தார்கள். அப்புறம், ஒரு ஹீரோவை வச்சு போயிடலாம்னு முடிவு செய்தாங்க. அந்த நிகழ்ச்சியை, நடிகர் ஜெய் அண்ணன் தொகுத்து வழங்கினார். அந்த சமயத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிற வாய்ப்பு கிடைத்தால், முருகதாஸ் சார் முன்னாடி எதாவது பண்ணி சினிமா வாய்ப்பு வாங்கிடலாம்னு நினச்சேன். அது நடக்கவில்லை என்றார்.

பின்னர், அவருடைய தயாரிப்பில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த படத்தோட விழாவில் பேசியபோது முருகதாஸ் சார், ஷங்கர் சார் படத்துல நடிக்கணும்னு சொல்லியிருந்தேன். அப்போ எல்லோரும் என்னை கலாய்ச்சாங்க. என் பேச்சு கேட்டு சிரிச்சாங்க..தொடர்ந்து உழைத்தால் மேல வரலாம்னு நினைத்தேன். ஒரு காலத்துல முருகதாஸ் இயக்கிய, கஜினி படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் அடுத்த நாள்தான் படத்தை பார்த்தேன். இன்னைக்கு முருகதாஸ் சார் இயக்கத்துல் நடிச்சிட்டு இங்கே நிற்கிறேன் என்றார்.

மேலும் முருகதாஸ் குறித்து பேசியவர், மதராஸி ஷாருக்கான் நடிக்க வேண்டியது. அதாவது எஸ்ஆர்கே நடிக்க வேண்டிய படத்துல இந்த எஸ்கே நடித்தது பெரிய விஷயம். நான் 10-வது படிக்கும்போது முருகதாஸ் சாரோட முதல் படம் ரிலீஸ் ஆனது. இன்னைக்கு என் பொண்ணு 7-வது படிக்கிறாங்க என்றார்.

தொடர்ந்து பேசியவர், எனக்கு துப்பாக்கி படம் எவ்வளவு பிடிக்கும் என்று நான் சொல்லியிருக்கேன். இன்னைக்கு ஒரு பக்கம் துப்பாக்கி டைரக்டர், இன்னொரு பக்கம் துப்பாக்கி வில்லன் இந்த படத்திலும் வில்லன். இருவருக்கும் இடையே இந்த படத்துல் நான் இருக்கிறேன் என்றார்.

தொடர்ந்து விஜய் குறித்து பேசியவர், "விஜய் சார்கூட நான் நடிச்சதுக்குப் பிறகு எல்லோருக்கும் சந்தோஷம். ஆன சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் பண்ணாங்க. எப்போதும் அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான். அவர் அப்படி நினைச்சிருந்தால் எனக்கு துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார். நானும் அப்படி நினைச்சிருந்தால் அந்த துப்பாக்கி வாங்கியிருக்கமாட்டேன். நான் அவருடைய ரசிகர்களை பிடிக்க பார்க்கிறேன்னு சொன்னாங்க. ரசிகர்களை அப்படி பிடிக்க முடியாது.

அஜித் சார் மன்றத்தை கலைத்து ரொம்ப நாள் ஆச்சு, இன்னும் அவர் பின்னாடி ரசிகர்கள் இருக்காங்க. அதே மாதிரி, ரஜினி சார், சிம்பு சார், தனுஷ் சார்னு பலருக்கும் ரசிகர்கள் இருக்காங்க. ரசிகர்களை சாம்பாதிக்கணும். நான் இப்போது சாம்பாதிக்க ஸ்டார்ட் பணியிருக்கேன். நீங்க நல்லா இருக்கணும், உங்க குடும்பம் நல்லா இருக்கணும். விமர்சனம் எல்லோருக்கும் வரும் என்றார்.

மேலும் ஒரு வருஷம் ஐ.பி.எல் நல்லா இல்லை லன்னு தோனியை விமர்சனம் பண்ணாங்க. இப்ப சி.எஸ்.கே கிட்ட 5 கப் இருக்கு. நம்மை திருத்திக்க விமர்சனம் சொன்னால் எடுத்துக்கோங்க. சோசியல் மீடியவுல ஆயிரம் சொல்வாங்க. நானும் அனிருத்திடம் அவருடைய திருமணம் பற்றி கேட்டேன். பொதுவாக திருமணமானவர்களுக்கு இரவு 8 மணிக்கு, ‘எங்கே இருக்கிறீர்கள்?’ என்று மனைவியிடமிருந்து போன் வரும். ஆனால் அனிருத்தின் வெய்க் அப் டைம்தான் இரவு 8 மணி.

அவருக்கு திருமணமா, ஹிட் பாடல்களா என்று நான் யோசித்தேன். இறுதியில் ஹிட் பாடல்களையே தேர்வு செய்தேன். அமரன் படத்தை டிவில பார்த்துட்டு ஒரு வயதான அம்மா என்னை பார்க்க வந்தாங்க. உங்கள அப்படி பார்த்ததும் எங்களுக்கு தூக்கம் வரலன்னு சொல்லி கையைத் தொட்டு பார்த்தாங்க. பிறகு அந்த அம்மாவோட ஹோம்ல இருக்கிறவங்க, அந்த மாதிரி கிளைமாக்ஸ் பண்ணாதீங்கன்னு' சொன்னாங்க. நம்ம வீட்டு பிள்ளைங்கிறது வெறும் டைட்டில் மட்டும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AniruthARMurugadossAudioLaunchBrothermadarasisivakarthikeyanSKvijay
Advertisement
Next Article