Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிஎம்டபிள்யூ கார் விபத்து - தலைமறைவான சிவசேனா தலைவரின் மகன் பிடிபட்டது எப்படி?

10:52 AM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

மும்பையில் பிஎம்டபிள்யூ கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த சிவசேனா தலைவர் மகன் மிஹிர் ஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

Advertisement

மும்பையின் வோர்லி பகுதியில்  கடந்த 7ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதிகள் மீது அந்த வழியில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் பிரதீப் நகாவா கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால் அவரது மனைவி காவேரி நகாவா(45) சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.

இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் காவேரி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை வோர்லி போலீஸார் கைப்பற்றினர்.

விசாரணையில், இந்த காரை ஓட்டி வந்தது சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா என்பது தெரியவந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய பின்னர் அவர் தலைமறைவானார்.  இதனையடுத்து காரின் உரிமையாளரான ராஜேஷ் ஷா, கார் ஓட்டுநர் மற்றும் இதில் தொடர்புடைய மற்றொருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த மிஹிர் ஷாவை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று மும்பை அருகே விராரில் மிஹிர் ஷாவை மும்பை போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் இருந்த போலீசார் அணைத்து வைக்கப்பட்ட அவரது மொபைலை கண்காணித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து திடீரென அவரது மொபைல் போன் ஆன் செய்யப்பட்டதை அறிந்த போலீசார், அதன் டவர் லொகேஷனை வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

Tags :
AccidentBMWMumbai PoliceRajesh Shahshiv sena
Advertisement
Next Article