Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் - ஆர்வத்துடன் ரத்தம் தானம் செய்த இளைஞர்கள்!

09:58 AM Nov 06, 2023 IST | Student Reporter
Advertisement

ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை,  ஸ்ரீபெரும்புதுார் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை,  அரன் தன்னார்வலர்கள் இணைந்து இன்று மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஜெயபாரதி தலைமையில் நடைபெற்றது.  மேலும் இதில் ரத்த தானம் செய்ய வந்தவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,  பெண்கள்,  தன்னார்வலர்கள் என ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.  மேலும் ரத்ததானம் செய்தவற்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும்,  கேடயங்களும் வழங்கப்பட்டது.

அனகா காளமேகன்

Tags :
100-க்கும் மேற்பட்டோர்ஸ்ரீபெரும்புதுார்அரசு மருத்துவமனைமாபெரும் ரத்ததானம் முகாம்காஞ்சிபுரம் மாவட்டம்ரத்த தானம் செய்தனர்
Advertisement
Next Article