Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#BiggBoss8 | இந்த வார எவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

12:22 PM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் நடிகர் அர்ணவ் வெளியேற்றப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்.6ம் தேதி தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், சாச்சனா வெளியேற்றப்பட்டார். இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளானது. பின்னர் அவர் அதிரடியாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

கடந்த சீசன்களை போல் அல்லாமல் இந்த முறை வித்தியாசமான முறையில் போட்டி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பிக்பாஸ் வீட்டையே இரண்டாக பிரித்து ஆண்களுக்கு ஒருபக்கம், பெண்களுக்கு ஒருபக்கம் என போட்டி சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து, முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், 2வது வார எவிக்ஷன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் எவிக்ஷ்னுக்கான நாமினேஷன் பட்டியலில் வி.ஜே.விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெப்ரி உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இவர்களில் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் அர்னவ் வெளியேற்றபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் இன்றிரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரியவரும்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகர் அர்ணவ் மனைவி திவ்யா செல்லவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அர்ணவ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுவிது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Tags :
BIGG BOSSBigg Boss TamilBigg Boss8ContentantEvictionnews7 tamil
Advertisement
Next Article