Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#BiggBoss8 | வைல்டு கார்டில் அதிரடியாக களமிறங்கும் சீரியல் நடிகை? யார் தெரியுமா?

06:47 PM Oct 18, 2024 IST | Web Editor
Advertisement

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் அர்ணவின் மனைவி திவ்யா வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்.6ம் தேதி தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன்களை போல் அல்லாமல் இந்த முறை வித்தியாசமான முறையில் போட்டி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பிக்பாஸ் வீட்டையே இரண்டாக பிரித்து ஆண்களுக்கு ஒருபக்கம், பெண்களுக்கு ஒருபக்கம் என போட்டி சென்று கொண்டிருக்கிறது.

ஜாக்லின், செளந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், சுனிதா, ரஞ்சித் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதில் நடிகர் அர்ணவும் ஒருவர். இவர் செல்லம்மா சீரியலின் மூலம் பிரபலமானவர். இவர் தனது மனைவி திவ்யாவை விவாகரத்து செய்தார். இதற்கு காரணம் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், நடிகை அன்ஷிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில், அர்ணவின் மனைவி திவ்யா பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. நடிகை திவ்யா தமிழ், கன்னட சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். தமிழில் மகராசி, செவ்வந்தி, கேளடி கண்மணி உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
BIGG BOSSBigg Boss 8Bigg Boss TamilContenstantnews7 tamilWild Card
Advertisement
Next Article