Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#BiggBoss: 24 மணி நேரத்திலேயே எவிக்ஷன்… வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் யார் தெரியுமா?

01:36 PM Oct 07, 2024 IST | Web Editor
Advertisement

பிக் பாஸ் சீசன் 8 போட்டி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே, மகாராஜா திரைப்பட புகழ் சாச்சனா எவிக்‌சன் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று (அக்.7) பிரமாண்டமாக தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை எவ்வாறு விஜய் சேதுபதி தொகுத்து வழங்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகவும் சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கையாண்டார் விஜய் சேதுபதி.

பிக் பாஸ் போட்டியில், முதல் நாளான நேற்று 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்து நடிகர் விஜய் சேதுபது வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். இந்த சீசனில், தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், நடிகை சாச்சனா, தர்ஷா குப்தா, சின்னத்திரை நடிகர் தீபக், சத்யா, அருண் பிரசாத், விஜே விஷால், விஜே ஆனந்தி, சுனிதா, கானா ஜெப்ரி, செளந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷிகா, முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த முறை ஆண்கள் vs பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டின் நடுவில் கோடு போடப்பட்டு தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி நிறைவடையும்போது பிக் பாஸில் இதுவரை நடந்திராத 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

அதன்படி பிக் பாஸ் போட்டியாளர்களில் மிகவும் குறைந்த வயது போட்டியாளரான மகாராஜா திரைப்பட புகழ் சாச்சனா வெளியேறி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும், போட்டி தொடங்கி 24 மணிநேரத்துக்குள் ஒரு போட்டியாளரை எதன் அடிப்படையில் வெளியேற்றப்படுகிறார் என்றும், சீக்ரட் ரூமில் சாச்சனா தங்கவைக்கப்படுவார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
பிக் பாஸ்BIGG BOSSBigg Boss Season 8Bigg Boss Tamilnews7 tamilVijay sethupathi
Advertisement
Next Article