Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெங்களூரு கூட்ட நெரிசல் - ஆர்சிபி நிர்வாகம் நிவாரணம் அறிவிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது.
04:54 PM Jun 05, 2025 IST | Web Editor
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது.
Advertisement

பல வருட போராட்டத்திற்கு பிறகு, நேற்று முன்தினம் (ஜூன்.03) பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதை நேற்று முன்தினம் இரவு முதல் அந்த அணியின் ரசிகர்கள் பட்டாசு மற்றும் மேலதாளத்துடன் கொண்டாடி வந்தனர். நீண்ட நாளுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி என்பதால், பொது இடத்தில் முன்னதாக வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட பெங்களூரு அணி தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.

Advertisement

இதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்க நேற்று 5 மணியளவில் சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, பேரணியின்போது ஏராளமான பெங்களூரு அணி ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குவியத் தொடங்கியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து,  கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரவும் பெரும் அசம்பாவிதத்தை தவிர்க்கவும் பெங்களூரு அணி ரசிகர்கள் மீது கர்நாடக காவல்துறையினர் தடியடி நடத்தினர். பின்னர், கூட்டம் கலைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். இந்த நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு அணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"பெங்களூரில் நேற்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆர்சிபி குடும்பத்திற்கு மிகுந்த வேதனையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை பெங்களூரு அணி அறிவித்துள்ளது. கூடுதலாக, இந்த துயர சம்பவத்தில் காயமடைந்த ரசிகர்களை ஆதரிப்பதற்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற நிதியும் உருவாக்கப்பட்டு வருகிறது. நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எங்கள் ரசிகர்கள் எப்போதும் மையமாக இருப்பார்கள். துக்கத்தில் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :
BengaluruBengaluru TragedyCricketIPLIPL 2025news7 tamilNews7 Tamil UpdatesRCB
Advertisement
Next Article