Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Bengaluru | கொலை செய்யப்பட்டு 30 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் | குற்றவாளி குறித்து போலீசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்!

12:01 PM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூருவில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (29) என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த 2ம் தேதியிலிருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் நெலமங்களா பகுதியில் இருந்து பெங்களூருவில் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்த போது மகாலட்சுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் 30 பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்து, உடல் பாகங்களை 30 துண்டுகளாக வெட்டிய தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவருடன் வேலைப்பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், மகாலட்சுமியை தினமும் அழைத்து சென்று வந்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்…ஏமாற்றம் இருக்காது…” – முதலமைச்சர் #MKStalin

அந்த இளைஞரை பற்றி தனிப்படை காவல்துறையினர் விசாரணை தொடங்கினர். அப்போது அவரது செல்போன் எண் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலீசார் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போனை கைப்பற்றினர். அடிக்கடி மகாலட்சுமியின் செல்போன் எண்ணில் இருந்து தலைமறைவான மேற்கு வங்க இளைஞர் செல்போனுக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது. அந்த இளைஞர் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பெண் கொலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மகாலட்சுமியின் கணவர் தெரிவித்துள்ளார். அந்த இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
BengaluruCrimefridge casehusbandMahalakshmiMurderNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article