Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - குவியும் சுற்றுலா பயணிகள்!

ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
10:36 AM Jun 01, 2025 IST | Web Editor
ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
Advertisement

தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா உட்பட தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளமான தென்காசியில் உள்ள குற்றால அருகளிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடம் திரும்பி வந்தனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து உள்ளதால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும்  தண்ணீர் சீராக வரத்தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை இறுதி நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Tags :
Courtallamtouristwater falls
Advertisement
Next Article