வங்கதேசம் ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து - 44 பேர் உயிரிழப்பு... பலர் படுகாயம்!
09:09 PM Mar 01, 2024 IST
|
Web Editor
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடுமையான போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் வணிக வளாகத்தில் இருந்து 75 பேரை உயிருடன் மீட்டனர். இந்த தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தனர். 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து டாக்கா மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் (Shopping Mall) ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
Advertisement
வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகம் (Shopping Mall) ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு சுமார் 9.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியது. மேல் தளங்களிலும் உணவகங்கள், துணிக் கடைகள் இருந்தன. இதனால் தீ இன்னும் எளிதாகப் பரவியது.
Next Article