முதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட தாயை இழந்த குட்டி யானை!
சத்தியமங்கலத்தில் தாயை பிரிந்து சுற்றித்திரிந்த குட்டியானை, முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டுவரப்பட்டு, குட்டி யானைகள் வளர்ப்பதற்கான கரால் கூண்டில் அடைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில்
குட்டியுடன் சுற்றித்திரிந்த தாய் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது. தாயை சுற்றி சுற்றி வந்த குட்டி யானையை புட்டிப்பால் கொடுத்து பராமரித்து வந்த நிலையில் மற்ற யானைகளுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதனையடுத்து குட்டி யானையை மற்ற யானைக்கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்தனர்.
கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குட்டி யானையை பராமரிக்க பழங்குடியினர் பாகனான சிவன் என்பவரை
வனத்துறையினர் நியமித்துள்ளனர். குட்டி யானைக்கு தேவையான பால் மற்றும் லாக்டோஜன் உள்ளிட்டவைகளை வழங்கி குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.