Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நா என்ன விட்ருங்க நா..!” | ஏரியாவுக்குள் ஜாலியாக வாக்கிங் வந்த முதலை குட்டி - அலேக்காக தூக்கிய வனத்துறை!

11:06 AM Nov 21, 2023 IST | Web Editor
Advertisement

புதுச்சேரி நகரப்பகுதியில் தென்பட்ட 4 அடி நீள முதலையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.

Advertisement

புதுச்சேரியின் மையப்பகுதியான காமராஜர் சாலையில் உப்பனாறு வாய்க்கால்
செல்கின்றது. இதில் இன்று காலை முதலை வந்ததாக அப்பகுதி மக்கள் புகைப்படம்
எடுத்து காவல்துறை மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மேலும் இந்த தகவல் அறிந்தவுடன் அப்பகுதியில் மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனைத்தொடர்ந்து கூட்டத்தினரை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் உப்பானாறு கரையோரம் தாழ்வான பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் மக்கள் அச்சப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உப்பனாறு பாலத்தின் அடியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், காமராஜர் சாலையில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் நேற்று காலை தென்பட்ட 4 அடி நீள முதலையைக் கூண்டு வைத்து இன்று அதிகாலை வனத்துறையினர் பிடித்தனர்.

Advertisement
Next Article