Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆவணி மாத பூஜை - சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு!

12:24 PM Aug 16, 2024 IST | Web Editor
Advertisement

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது.

Advertisement

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.  அந்த வகையில், ஆவணி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.  தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நடையை திறந்து வைத்து ஐய்யப்பனுக்கு தீபாராதனை காண்பிப்பார். பின்னர் இரவு 10 மணியளவில் நடை சாத்தப்படுகிறது.

இதனையடுத்து நாளை அதிகாலை 5 மணியளவில் நடை திறககப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறுகிறது.  பின்னர் காலை 7 மணியளவில் உஷ பூஜையும், மதியம் 12.30 மணியளவில் உச்ச பூஜையும் அதனைத் தொடர்ந்து களபாபிஷேகமும், இதனையடுத்து மாலையில் தீபாராதனையும், இரவு புஷ்பாபிஷேகம் மற்றம் படி பூஜையும் நடத்தப்படுகிறது.

ஐயப்பன் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. அனைத்து நாட்களிலும் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜையும், இரவு 7.00 -மணியளவில் படி பூஜையும் நடைபெறும். பின்னர் ஆக. 21ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ayyappan templedevoteesKeralaSabarimalaSami Darshanam
Advertisement
Next Article