Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குவைத்தில் மேலும் ஒரு தீ விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

02:48 PM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

குவைத் நாட்டில் அப்பாஸிய பகுதியில் குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

Advertisement

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் (வயது40).  இவரது மனைவி லினி ஆபிரகாம் (38).  இவர்களது குழந்தைகள் இரின் (14),  இசாக் (9).  மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர்.  இதனால் மேத்யூஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குவைத் அப்பாஸிய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

அவர்களது குழந்தைகள் குவைத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.  விடுமுறை கிடைக்கும் போது கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம்.  அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார்.

பின்பு விடுமுறை முடிந்ததையடுத்து குவைத்துக்கு திரும்பினர்.  மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் நேற்று மாலை 4 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். பின்பு 4 பேரும் வீட்டில் உள்ள படுக்கையறையில் படுத்து தூங்கியிருக்கின்றனர்.

அப்போது இரவில் அவர்களது வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  அறை முழுவதும் புகையாக இருந்ததால் அவர்களால் வெளியே வர முடிய வில்லை.  இதனால் மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
fireFire accidentKeralaKuwaitKuwait Fire Accident
Advertisement
Next Article