Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பயணிகள் கவனத்திற்கு!… சென்னை தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் சேவை இன்று ரத்து! #SouthernRailway அறிவிப்பு!

08:22 AM Sep 22, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் யார்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் இயங்கக்கூடிய ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 13 மணி நேரத்திற்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் மற்றும் திரும்பிச் செல்லும் அனைத்து புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் இன்றைய அட்டவணைப்படி இயங்கும். மேலும் ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில்களுக்குப் பதிலாக சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்திற்குச் சிறப்பு புறநகர் ரயில்களானது இயக்கப்படும். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல் பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ள தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மேலும், எனவே, தாம்பரத்தில் இருந்து இன்று 50 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

Advertisement
Next Article