பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் 17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து!
சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை - கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே இன்று (ஜுன் 9) மற்றும் வரும் 12ம் தேதியில் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முழுவதுமாக ரத்து:
- சென்டிரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள்.
- சென்டிரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள்.
- கடற்கரையில் இருந்து காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள்.
- சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில்.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் சென்டிரல் செல்லும் மின்சார ரயில்கள்.
- சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, மாலை 3.10, இரவு 9 மணிக்கு சென்டிரல் செல்லும் மின்சார ரயில்கள்.
- சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரயில்.
- மேற்குறிப்பிட்ட அனைத்து ரயில்களும் இன்று மற்றும் 12ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து:
- செங்கல்பட்டில் இருந்து இன்று (ஜுன் 9) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.
- கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.
சிறப்பு ரெயில்
இதன் காரணமாக இந்த 2 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, காலை 10.30 மணிக்கு சென்டிரல் - பொன்னேரிக்கும், காலை 11.35 மணிக்கு சென்டிரல் - மீஞ்சூருக்கும், மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-பொன்னேரிக்கும், மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - சென்டிரலுக்கும், மதியம் 2.56 மணிக்கு மீஞ்சூர் - சென்டிரலுக்கும், மாலை 3.33 மணிக்கு பொன்னேரி - சென்டிரலுக்கும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது"
இவ்வாறு தெற்கு ரயில் தெரிவித்துள்ளது.