Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செல்லப்பிராணிகளுக்காக அறிமுகமான வாசனை திரவியம்! வெடித்த சர்ச்சை!

11:39 AM Aug 08, 2024 IST | Web Editor
Advertisement

இத்தாலிய நிறுவனமான Dolce & Gabbana நாய்களுக்கான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

இத்தாலிய நிறுவனமான டால்ஸ் & கபனா நாய்களுக்காக ‘ஃபெஃப்’ என்ற வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாய்களுக்காக ஆல்கஹால் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இந்த திரவியத்தின் விலை 99 யூரோக்கள், இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9,000 ஆகும்.

இந்த திரவியம் பச்சை நிறப் கண்ணாடி பாட்டிலில் வருகிறது. பாட்டிலின் மேல் தங்க முலாம் பூசப்பட்ட நாய் பாத இலட்சினையும் பொதிக்கப்பட்டுள்ளது. நாய் உரிமையாளர்கள் வாசனை திரவியத்தை தங்கள் கைகளில் முதலில் அடித்து, அதனை நாயின் ரோமத்தில் தடவ வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் மூக்குப் பகுதியை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ‘ஃபெஃப்’ -ன் அறிமுகம் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. பலர் இது விலங்குகளின் வாசனை உணர்வை குழப்பக்கூடும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ரசாயனங்கள் அவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறிவருகின்றனர்.

“நாய்கள் மக்களையும், விலங்குகளையும் தொடர்பு கொள்ள தனது மோப்பதிறனையும், அவர்களின் உடல் வாசனையையுமே நம்பியுள்ளன. ஆகையால் இந்த வாசனை திரவியங்கள் அவற்றிற்கு ஏற்றதாக அமையாது, இவை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் நாய்களும் இதை விரும்பாது” என விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டியின் மூத்த அதிகாரி ஆலிஸ் பாட்டர் கூறியுள்ளார்.

Tags :
Dog PerfumedogsDolce & GabbanaFefe
Advertisement
Next Article