ஒடிசாவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலி - வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!
சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலியாக வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதனையடுத்து இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் பதவி ஏற்க நரேந்திர மோடி உரிமை கோரியதை அடுத்து அவர் இன்று பதவியேற்பை நடத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், “வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது. நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.
இந்த நிலையில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட வி.கே.பாண்டியன் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது..