Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ரிலீஸ் டிரைலர் வெளியீடு! உண்மையான டிமான்டி காலனி பற்றி கொஞ்சம் பாப்போமா!

08:26 PM Jul 24, 2024 IST | Web Editor
Advertisement

அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் தனெக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

அப்படி நடிகர் அருள்நிதி தேர்தெடுத்தது நடித்ததுதான் இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் 2015-ஆம் ஆண்டு வெளியான “டிமான்டி காலனி” திரைப்படம். இது ரசிகர்களை உறைய வைக்கும் திகில் படமாக இருந்தது. சென்னையில் உண்மையாகவே டிமான்டி காலனி என்கிற பகுதி இருக்கும் நிலையில், அப்பகுதியை மையப்படுத்தி உலாவும் தகவல்களை மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டது. இதில் இத்திரைப்படம் வெளியான பிறகு அந்த டிமான்டி காலனி பகுதி குறித்த தகவல்கள் மேலும் பேசுபொருளானது.

சென்னையில் “டிமான்டி காலனி” பேய் வீடுகள்:

திரைப்படத்தின் மையக்கருவான டிமான்டி காலனி சென்னை அபிராமிபுரம் நகருக்கு அருகில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, டிமான்டி என்பவர், தன்னுடைய மனைவியுடன் இங்கு வாழ்ந்ததாகவும், மனைவிக்கு மனநலம் சரியில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  அப்போது டிமான்டியின் குழந்தையும் மர்மமாக இறந்துள்ளது. இதற்கு பிறகு, இன்னும் நிறைய இனம்புரியாத சம்பவங்கள் அந்த காலனியில் நடந்ததாகவும், அதற்கு பிறகு, மக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்வதில்லை என்றும் சொல்கிறார்கள். செயின்ட் மேரி சாலையிலிருந்து வலதுபுறம் அமைந்துள்ள இந்த காலனியில் நிறைய மரங்களும், பாழடைந்த வீடுகளும் வரிசையாக இரண்டு பாதைகளில் இருந்தன.

டிமான்டி காலனியில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக கிளம்பிய வதந்தியால் அப்பகுதி ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக பலகாலமாக திகழ்ந்து வருகிறது. டிமாண்டி காலனியில் முன்பு வசித்த மக்கள், டிமாண்டி காலனி சொத்தை கையாள்வதில் சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பிவிடுவதாக கூறி வந்தனர். இதனிடையே, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு டிமான்டி காலனியில் அமைந்திருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

டிமான்டி காலணி 2:

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.

டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களை இயக்கியுள்ளார்.

டிமான்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித் மற்றும் அர்ச்சனா ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் சுப்ரமணியனின் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஆர்.சி.ராஜ்குமாரின் ஞானமுத்து பட்டறையுடன் இணைந்து பாபி பாலச்சந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 17-ம் தேதி வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் அமைவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே முதல் பாகத்திற்கு கிடைத்தது போலவே இந்த பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Ajay R GnanamuthuArulnithiDarkness Will RuleDemonte Colony 2News7Tamilnews7TamilUpdatesRelease TrailerTrailerVengeance Of The Unholy
Advertisement
Next Article