Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் அப்பர் கோதையாறு நோக்கி சென்ற அரிக்கொம்பன் -வனத்துறை தகவல்!

07:29 AM Nov 07, 2023 IST | Web Editor
Advertisement

மாஞ்சோலை அருகே உள்ள ஊத்து எஸ்டேட் பகுதியில் அரிக்கொம்பன் முகாமிட்டுள்ள நிலையில், வனத்துறையினர் ரேடார் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Advertisement

இதனைத்தொடர்ந்து அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடர் கருவியை பொருத்தி, வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மாஞ்சோலை அருகே உள்ள ஊத்து தேயிலை தோட்டப்பகுதிக்குள் அரிக்கொம்பன் நடமாடியது.

இதையடுத்து வனத்துறையினர் 3 நாட்கள் இப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். அதன்பின்னர் அரிக்கொம்பன், மீண்டும் கோதையாறு வனப்பகுதிக்கு சென்றது.
அரிக்கொம்பன் விடப்பட்ட குட்டியாறு அணையில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதி அமைந்துள்ளது.

இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர். எனவே, அரிக்கொம்பன் யானையால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் அச்சப்படி, செப்டம்பர் மாதம் அரிக்கொம்பன் காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் ஊத்து தேயிலை தோட்ட பகுதி அருகே உள்ள நாலாங்காடு என்ற வனப்பகுதியில் அரிக்கொம்பன் முகாமிட்டுள்ளது.

ஏற்கனவே, அரிக்கொம்பன் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடார் கருவி மூலமாக 6 பேர் கொண்ட வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில் தற்போது தேயிலை தோட்ட பகுதி அருகே வந்துள்ளதால் கூடுதலாக சுமார் 15 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அரிக்கொம்பன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இரண்டாவது முறையாக அரிக்கொம்பன் காட்டு யானை மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

 

Advertisement
Next Article