Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளைக்கு சிஎஸ்கே போட்டியை நேரில் பாக்க போறீங்களா?.. மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!

09:55 PM Mar 25, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் தொடரை காண செல்பவர்கள் தங்களது IPL கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளதாவது;

‘சென்னை, M. A. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நாளை (மார்.26) நடைபெற உள்ள IPL2024 கிரிக்கெட் போட்டியை காணவரும் பார்வையாளர்கள், தங்களது IPL கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், மாநகர போக்குவரத்துக் கழகம், போட்டி முடிந்த பின்பும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் Chennai Super Kings Cricket Limited நிறுவனத்திடம் மா.போ.கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த வசதியானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 22.03.2024 அன்று நடைபெற்ற போட்டியின் போது வழங்கிய ஒத்துழைப்பு போல் இந்த போட்டிக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
#SportsChennaiCheppakkamCricketCskCSK vs GTMTCTicket Free
Advertisement
Next Article