Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அண்ணாவின் 55-வது நினைவு தினம் - திமுகவினர் அமைதிப் பேரணி!

10:00 AM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து அமைதிப் பேரணி நடத்தினர்.

Advertisement

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விடுதி அருகில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.  அமைதிப் பேரணியில் அமைச்சர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் கருப்புச்சட்டை அணிந்து பங்கெடுத்தனர்.  பேரணியாக சென்ற திமுக‌ பொருளாளர் டி ஆர் பாலு,  திமுக துணை பொதுச் செயலாளர்கள் அ.ராசா எம்.பி, கனிமொழி எம்பி,  அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  ஐ பெரியசாமி, கே என் நேரு,  எ.வ வேலு,  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  மா சுப்பிரமணியன், காந்தி,  செஞ்சி மஸ்தான்,  சாமிநாதன்,  கயல்விழி செல்வராஜ் , சி வெ கணேசன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

இதனைத் ஹொடர்ந்து தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags :
பேரறிஞர் அண்ணாAnna Memorial DayDMKrallyUdhaynidhi Stalin
Advertisement
Next Article