அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்!
திருப்பூர் மாவட்டம் முத்தனம் பாளையம் பகுதியில் அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சமுதாய மக்களின் குலதெய்வ கோவிலாக உள்ளது. இந்த கோவிலின் கருவறையில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டு உள்ளதால் இந்த கோவிலானது பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக உள்ளது.
இந்த கோயிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கோவில் புனரமைக்கப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கும்பாபிஷேகத்தின் முதல் நாளான இன்று 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை தட்டுகளுடனும், முளைப்பாரி, தீர்த்த கூடங்களை பஞ்ச வாத்தியங்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பெண்களின் காவடியாட்டம் கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் எதிர்வரும் ஆறாம் தேதி அதிகாலை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.