Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மும்பையில் பள்ளிக்கூடம் திறந்த நீடா அம்பானி! ஆகஸ்ட் முதல் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்!

03:24 PM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பிறகு மும்பையில் பள்ளி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் நீடா அம்பானி கலந்து கொண்டார்.

Advertisement

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமண கொண்டாட்டங்கள் ஜூலை 12ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றன். இந்த திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதையும் படியுங்கள் : குஜராத்: திடீரென இடிந்து விழுந்த வகுப்பறை சுவர் – பதற வைக்கும் வீடியோ!

இந்நிலையில், கடந்த 17ம் தேதி நீதா அம்பானியும் மற்றும் இஷா அம்பானியும் இணைந்து மும்பையில் ஆரம்ப பள்ளிக்கூடத்தை திறந்து வைத்துள்ளானர். இந்நிலையில், நீடா முகேஷ் அம்பானி ஜூனியர் பள்ளி என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் அந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட நீதா அம்பானி மற்றும் இஷா அம்பானியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :
AnantishaMumbainita ambaninita mukesh ambani junior schoolRadhikaSchoolWedding
Advertisement
Next Article