நடப்பு சாம்பியன் கொல்கத்தாவின் கேப்டனாக அஜின்கியா ரகானே நியமனம்!
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்ற கிரிக்கெட் போட்டிகளைவிட ஐபிஎல் போட்டிகள் இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 18 வது சீசனானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
போட்டிக்கான அணிகள் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் போட்டி மார்.23 தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளின் கேப்டன்களை, புது ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது அணியின் புதிய ஜெர்ஸியை இன்று வெளியிட்டது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக அஜின்கியா ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமனம் செய்யப்பட்டார்.