Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி - ஏராளமானோர் பங்கேற்பு!

09:56 AM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

மானாமதுரை அருகே இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி விழா வெகு விமரிசையான நடைபெற்றது.

Advertisement

மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர்
ஆலயம் உள்ளது.  தமிழ்நாடு அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி
நடைபெறுவது வழக்கம்.  மேலும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் இங்கு சிறப்பு திருப்பலி நடைபெறும்.

அன்றைய தினங்களில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வருகை தந்து, இந்த திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். இந்த ஆலயம் தமிழ்நாட்டிலேயே ஏசுநாதர் தனது இடது பக்கத்தில் இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் 10 நாட்கள் தேர்பவனி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த விழா நடைபெறும் தினங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பங்குத் தந்தைகள் கலந்து கொண்டு ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைப்பர். 130வது ஆண்டு தேர்பவனி விழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையடுத்து, தினந்தோறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு தேர் பவனி விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து 10ம் நாளான இன்று நற்கருணை நிகழ்ச்சியுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது.

Tags :
churchfestivalIdaikkatturIruthaya Aandavar AalayamManamadurai
Advertisement
Next Article