Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert | சென்னையில் நாளை முதல் கூடுதல் #Metro ரயில்கள் இயக்கம்!

09:40 PM Oct 14, 2024 IST | Web Editor
Advertisement

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் (அக்.16) மற்றும் 17ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

https://twitter.com/cmrlofficial/status/1845805328840933686

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (அக்.15) முதல் வரும் 17ம் தேதி வரை, 16,17 ஆகிய தேதிகளில் கூடுதலாக மெட்ரோ ரெயில் இயக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். காலை 8 முதல் 11 மணி வரை பச்சை வழித்தடத்தில் 5 நிமிட இடைவெளியிலும், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்"

இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
ChennaiHeavy rainfallMetronews7 tamilrainfallTn RainsTrain
Advertisement
Next Article