"நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் நல்லது நடக்கும்" - நடிகை சாக்ஷி அகர்வால் பேட்டி!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் நல்லது நடக்கும் என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
மாடலாக தனது பயணத்தை தொடங்கிய சாக்ஷி அகர்வாலுக்கு வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ராஜா ராணி, காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள சினிமா உலகிலும் கால் தடம் பதித்துள்ளார்.
மேலும், தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார். அடுத்தடுத்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் சாக்ஷி அகர்வால் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் நல்லது நடக்கும். நடிகர் விஜய் போன்ற இளம் தலைவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. இளம் தலைவர்களால் நல்லது நடக்கும். மேலும், நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவது கஷ்டமாக இருக்கிறது. நடிகர்கள் லாரன்ஸ், பாலா போன்றவர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்வது மிகவும் நல்லது.
இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் 'தங்கலான்' திரைப்படம் பார்க்க ஆவலான உள்ளேன். இதைபோல, அந்தகன், ராயன், தங்கலான் ஆகிய மூன்று திரைப்படங்களுமே பார்க்க வேண்டும். பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' திரைப்படம் வெற்றி பெற அவருக்கு என் வாழ்த்துகள்"
இவ்வாறு சாக்ஷி அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.