Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விமானத்தில் திடீர் கேளாறு! -‛உயிர் தப்பிய நடிகை ராஷ்மிகா மந்தனா’

03:49 PM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கபட்டது.

Advertisement

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த விமானம் 30 நிமிடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்தனர். இந்த விமானத்தில் நடிகை  ராஷ்மிகா மந்தனா மற்றும் அவருடன் நடிகை ஷ்ரத்தா தாஸ் பயணம் செய்து  இருந்தனர்.

இதையும் படியுங்கள் : சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது திமுக மட்டுமே - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷ்ரத்தா தாஸுடன் இருக்கும் ஒரு சுயபடத்தை வெளியிட்டு, "இன்று நாம் மரணத்திலிருந்து தப்பித்தோம்..." எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகிய அனிமல் திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்திருந்த நிலையில், இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்திய சிறந்த வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ActressdisturbanceflightMumbairashmika mandanasurvived
Advertisement
Next Article