Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'கங்குவா' படப்பிடிப்பில் விபத்து - உயிர்தப்பிய  நடிகர் சூர்யா!

01:55 PM Nov 23, 2023 IST | Web Editor
Advertisement

'கங்குவா' படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.  மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன.  தொடர்ந்து சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.  சூர்யாவின் சண்டைக் காட்சிகள் இன்று காலை படமாக்கப்பட்ட போது,  10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  மேட்டுப்பாளையத்தில் கனமழை; குன்னூர் சாலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

இதில் சூர்யா உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், சூர்யாவின் தோள்பட்டையில் லேசாக கேமரா மோதியதாகவும்,  படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கெனவே ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து இரண்டு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags :
Accidentactor suryaKanguvanews7 tamilNews7 Tamil Updatesshooting spotSivaSurya
Advertisement
Next Article