Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலக கோப்பை அரையிறுதி போட்டியை காண மும்பை சென்ற நடிகர் ரஜினிகாந்த்!

10:08 AM Nov 15, 2023 IST | Student Reporter
Advertisement

உலக கோப்பை அரையிறுதி போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றார்.

Advertisement

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.  லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:  “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது!” – வானிலை ஆய்வு மையம் தகவல்

நான்காவது இடத்திற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.  இந்திய கிரிக்கெட் அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.    இதனை தொடர்ந்து,  இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் அரையிறுதி ஆட்டம் நடைபெற உள்ளது.

முதல் அரையிறுதி ஆட்டத்தில்,  முதல் இடைத்தை பிடித்த இந்திய அணி நான்காவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.  இந்த போட்டியை காண்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

Tags :
#Sportsactor rajinikanthCricketIndiaMumbaiNew Zealandnews7 tamilnews7 tamil updatesemi finalThalaivarworld cup
Advertisement
Next Article