Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு,!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
04:35 PM Sep 22, 2025 IST | Web Editor
அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Advertisement

தமிழ் நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவர் கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக 2011 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகிய  இருவரையும் விடுவித்து கடந்த  2017 ம் ஆண்டு வேலூர் சிறப்பு நீதிமன்றம் ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில்  அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும், துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக விசாரணையை நடத்தி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் விசாரணை நீதிமன்றத்துக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தன்னை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து துரைமுருகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டனர்

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்

Tags :
assetcaseduraimuruganlatestNewsSupremeCourtTNnews
Advertisement
Next Article