மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Boom’
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் ஒரு பகுதியான மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஏற்பட்ட விபத்து என ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பூம் விசாரணையில், அந்த காணொலி பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
ஜனவரி 11, 2025 அன்று, கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் அம்பிரி கல்லா சௌக் அருகே ஒரு பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டது. வைரல் காணொலியில் எழுதப்பட்ட ஒரு வாசகம், 'மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பாருங்கள்' என்று எழுதப்பட்டது. பல சமூக ஊடக பயனர்கள் இந்த காணொலியை இதே கூற்றுடன் பகிர்ந்தனர்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி BOOM வைரல் காணொலியைத் தேடியது. ஜனவரி 2025 இல் பல பாகிஸ்தானிய சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்ட இந்த காணொலியை நாங்கள் கண்டோம். இந்த பயனர்கள் தங்கள் பதிவுகளில் இந்த காணொலி கரக்கில் உள்ள அம்பிரி கல்லா சௌக்கில் நடந்த ஒரு சாலை விபத்தின் காணொலி என்று கூறியுள்ளனர். இந்தப் பதிவுகள் ஜனவரி 10 முதல் 12 வரை உருது தலைப்புகளுடன் பகிரப்பட்டன.
கூகுள் தேடலில் அம்பிரி கல்லா சௌக் என்பது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இடம் என்பதைக் கண்டறிந்தோம். இது சிந்து நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, உருது மொழியில் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகிளில் தேடினோம். பல ஊடகங்களில் ( ட்ரிப்யூன் , தி நியூஸ் , அல் அரேபியா மற்றும் ஜியோ டிவி ) இந்தச் சம்பவம் குறித்த செய்தி அறிக்கைகளைக் கண்டோம்.
இந்த ஊடக அறிக்கைகளின்படி, ஜனவரி 11, 2025 அன்று, கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் அம்பிரி கல்லா சௌக் அருகே ஒரு பயங்கரமான சாலை விபத்து நடந்தது என்பத தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 22 சக்கர கனரக வாகனத்தின் பிரேக்குகள் செயலிழந்து, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பயணிகள் பேருந்து மற்றும் பல வாகனங்கள் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரல் காணொலியின் சில காட்சிகள் சம்பவத்தின் சில காணொலி அறிக்கைகளிலும் ( மஷ்ரிக் டிவி மற்றும் ஈடிவி 247 உர்டு ) காணப்படுகின்றன .
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா தொடர்பாக இந்த காணொலி பகிரப்பட்டபோது, உத்தரப் பிரதேச காவல்துறை தனது X பக்கத்தில், வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கும்பமேளா காவல்துறையால் எஃப்ஐஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் ஒரு பகுதியான மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஏற்பட்ட விபத்து என ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பூம் நடத்திய விசாரணையில் அந்த காணொலி பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.