Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து!

12:51 PM Aug 04, 2024 IST | Web Editor
Advertisement

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் இன்று (ஆக. 4) காலை விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் 11வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சூழலில் நின்று கொண்டிருந்த கோர்பா எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று ஏசி பெட்டிகளில் திடீரென தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்தடைந்த தீயணைப்பு வீரர்கள் ஏசி பெட்டிகளில் மளமளவென எறிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட போது பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  இச்சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags :
fireFire accidentTraintrain accidentVisakhapatnam
Advertisement
Next Article