Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தலில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் -இபிஎஸ் காட்டம்...!

12:31 PM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தலில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

Advertisement

பொதுக்கூட்டம் ஒன்றில் எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில்  திமுகவின் துணை பொதுச்செயலாளரும் , நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் முன்னாள் முதல்வரும் , அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி,  செங்கோட்டையன் , எம்.எஸ்.எம் ஆனந்தன்,  உடுமலை ராதாகிருஷ்ணன்,  பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசியதாவது:

எம்.ஜி.ஆர் என்னும் மாமனிதர் உருவாக்கிய கட்சி அதிமுக.  நம் தலைவர் மக்களுக்காக வாழ்ந்தவர். அவர் தெய்வப்பிறவி.  அதிமுகவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் ஆ.ராசா பேசி வருகிறார்.  தொண்டர்களின் மனம் காயம்பட்டிருக்கிறது.  தொண்டனாகப் பேசி வருகிறேன். மக்கள் வெகுண்டெழுந்த எல் தாக்குப்பிடிப்பாரா ராசா?

1967-ம் ஆண்டு MGR முகம் காட்டித் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.  ஆ.ராசா இனிமேலாவது உளருவதை நிறுத்தி விட்டு நல்லதைப் பேச வேண்டும்.  இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்.  மக்களவை தேர்தலில் போட்டியிட்டால் ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.  புரட்சித் தலைவரை விமர்சித்தவரை தட்டிக்கேட்க 2 கோடி பேர் உள்ளனர் என்பதை காட்ட வேண்டும்.

அதிமுகவின் 30 ஆண்டுகால ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறி வந்தது.  50 ஆண்டுக்கால மக்களின் போராட்டத்திற்குத் தீர்வு காணும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு ரூ.1512 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீதம் முடிந்த நிலையில் 10 சதவீத பணி இரண்டரை ஆண்டுக்காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  அதிமுக தொடங்கிய திட்டம் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கூட்டு குடிநீர் திட்டங்களைத் திட்டம் போட்டு நிறைவேற்றியது அதிமுக அரசு.  நாம் கொண்டு வந்த திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கவுள்ளார்.  திமுக ஆட்சி வந்து என்ன திட்டத்தை செய்துள்ளார்கள்?  அதிமுக கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகிறார்கள்.  3 ஆண்டுக்காலத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத் தான் திறந்து வருகிறார்கள்.

திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைக் கொண்டு வந்தது அதிமுக அரசு.  திமுக அரசு அமைந்தவுடன் கடுமையான மின் கட்டண உயர்வு , இதை கண்டித்து அறவழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  தொழில் நலிவடைந்து வருகின்றன.  தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர்.  அந்நிய செலவானியை ஈட்டி தரும் திருப்பூருக்கு நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால் திமுக ஒன்றும் செய்யவில்லை.

முதலமைச்சர் ஸ்பெயின் சென்றார் . 11 நாட்கள் தங்கியிருந்தார்.  3 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகச் செய்தி வந்தது.  ஆனால் அந்த 3 நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்தது.  சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் ஒப்பந்தம் போடவில்லை. தொழில் முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு செய்ய போயுள்ளார்.

தாலிக்கு தங்கம் ,  மாணவர்களுக்கு மடிக்கணினி இவையெல்லாம் முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்குச் சேரும்.  கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தது அதிமுக.  2019, 2021 தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.  மகளிர் உரிமைத் தொகை அதிமுக தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்தால் வழங்கினார்கள்.  அதுவும் தகுதியின் அடிப்படையில் என மூன்றில் ஒரு பங்கு வழங்கினார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Tags :
Election2024
Advertisement
Next Article