Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

12:38 PM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement

பாஜக ஆட்சிக்கு வந்த பின் நாட்டில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன்,  தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்கள் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags :
#NirmalasitaramanBudgetBudget2024BudgetliveBudgetliveupdatesBusinessnewsIndiaInterimBudgetNarendramodi
Advertisement
Next Article