Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாப்பாநாட்டில் #bandh!

11:40 AM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement
பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

Advertisement

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு பகுதியைச் சோ்ந்த 22 வயது இளம் பெண்ணை, அவரது ஆண் நண்பர், 17 வயது சிறுவன் உட்பட நான்கு போ் கடந்த 12ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனா். இதுதொடா்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விளக்கம் கேட்டு ஒரத்தநாடு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதேபோல் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யாமலும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் அலட்சியமாக செயல்பட்ட பாப்பாநாடு உதவி பெண் காவல் ஆய்வாளர் சூர்யாவை பணியிடமாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டணம் தெரிவித்து பாப்பாநாடு பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வணிகர்களும் கடையடைப்பு போராட்டத்திலும், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் எனவும் இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
BandhCrimeHunger strikeSexual assaultThanjavur
Advertisement
Next Article