Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

250 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு!

01:27 PM Jul 30, 2024 IST | Web Editor
Advertisement

மத்தியப் பிரதேசத்தில் 250 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

Advertisement

மத்தியப் பிரதேசத்தின் கசர் கிராமத்தில் 3 வயதான சௌமியா என்ற சிறுமி, நேற்று மாலை 5 மணியளிவல் வயலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அருகில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தை 250 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்டதாக மீட்புப்படைக் குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஐந்தரை மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியில் மீட்டுள்ளனர். உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

Tags :
borewellChildMadhya pradesh
Advertisement
Next Article