Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குவைத் சாலை விபத்தில் தமிழர் உட்பட 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு...

02:15 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

குவைத்தில் கார் விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

ஜாபர் அல் அலி பகுதிக்கு எதிரே உள்ள 7-வது ரிங் ரோட்டில் மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இந்தியாவை சேர்ந்த 5 தொழிலாளர்களும் மற்றும் பங்களாதேஷ்சை சேர்ந்த 2 தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் கிருஷ்ணசாமி மற்றும் பஞ்சாபை சேர்ந்த விக்ரம் சிங், தேவிந்தர் சிங், பக்கர் சிங், பிஹாரி லால் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்களை ஏற்றிச் மினி வேன், மற்றொரு மீது மோதியதில் வாகனம் விபத்துக்குள்ளானது என தெரியவந்துள்ளது. இதைனையடுத்து, பாதுகாப்புப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் குழுக்கள் மற்றும் பொது தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட அவசரகால பதிலளிப்பவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்ப இடத்திற்கு வந்த, அவர்கள் இறந்ததை உறுதிசெய்து, உடல்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Tags :
AccidentKuwaitRoad accident
Advertisement
Next Article