Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன் - பீகாரில் பரபரப்பு!

07:43 PM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

பீகார் மாநிலத்தில் தனியார் பள்ளியில் பயின்று வரும் 5 வயது சிறுவன் 3ம் வகுப்பு படிக்கும் மாணவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்து துப்பாக்கியை  பள்ளிக்கு எடுத்து வந்திருக்கிறார். அந்த சிறுவன் தனது பேக்கில் இருந்த துப்பாக்கியை எடுத்து அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

அந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் 10 வயது சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை அறிந்த துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவனின் தந்தை தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில், அந்த 5 வயது சிறுவனின் தந்தையை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து – எதிர்காலத்தில் யுபிஎஸ்சி எழுதவும் தடை!

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பள்ளி முதல்வரை கைதுசெய்து எப்படி அந்த சிறுவன் துப்பாக்கியை பள்ளிக்கூடத்திற்கு எடுத்து வரும் வரை கவனக்குறைவாக இருந்தீர்கள் என்று காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், 5 வயது சிறுவன் 3ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
5yearboyBihargunprivate schoolshotsupaul
Advertisement
Next Article