5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு!
03:17 PM Dec 16, 2024 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி உத்தரவு அளித்துள்ளது. அமுதா ஐஏஎஸ், அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக உள்ள அமுதா ஐஏஎஸ்ஸுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது போல் அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா அபூர்வா ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Next Article