Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லையில் சிக்கியது 4-வது சிறுத்தை - மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்டது!

09:40 AM May 24, 2024 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அனவன் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த 4-வது சிறுத்தையையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், சிறுத்தை பாதுகாப்பாக அடர்வனப் பகுதிக்குள் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அனவன் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றி வருவதாக பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர்.

இதனையடுத்து, கடந்த 17-ம் தேதி சிக்கிய சிறுத்தை, மணிமுத்தாறு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தொடர்ந்து 21, 22-ம் தேதிகளில் 2 சிறுத்தைகள் சிக்கிய நிலையில், அவை பாபநாசம் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. இருப்பினும், அனவன் குடியிருப்பு வேம்பையாபுரம் பகுதிகளில் மேலும் 2 சிறுத்தைகள் உலா வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியில் அச்சத்தோடு இருந்த நிலையில், வனத்துறையினர்
அவற்றைப் பிடிப்பதற்கு கூண்டுகளை வைத்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 4-வதாக மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.  இந்த சிறுத்தை மணிமுத்தாறு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. எனினும் உலா வரும் மற்றொரு சிறுத்தையையும் பிடித்து, வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
forestleopardNellai
Advertisement
Next Article