Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் இதுவரை 48பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

06:51 AM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

தமிழகத்தில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் இன்று 16 பேருக்கும், சென்னையில் நான்கு பேருக்கும் கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது.

Tags :
Coronacorona viruscovid 19covid 19 cases
Advertisement
Next Article