நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான 4732 வழக்குகள் நிலுவை!
நாடு முழுவதுமம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி, பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணை மற்றும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தொடர்பான அறிக்கையை அளிக்க, உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் வழக்கறிஞர் விஜய் ஹசாரியாவை (Amicus curiae) நியமித்தது.
இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த வழக்கறிஞர் விஜய் ஹசாரியா, நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றங்களில் 4732 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, 220 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.