Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீனாவில் தொடர் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!

சீனாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
09:47 PM Jul 29, 2025 IST | Web Editor
சீனாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. நாட்டின் முக்கிய மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. தொடர் கனமழையால் நாட்டின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கனமழை எதிரொளியாக எங்கும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால்  மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Advertisement

இந்த கனமழையால் பாதிப்பு காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மின் துண்டிப்பால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் பெய்துள்ள கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Tags :
chinachinaheavyrainFloodlanndscapeWorldNews
Advertisement
Next Article