Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
08:35 PM Jan 23, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இதையும் படியுங்கள் : “டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி” – #Annamalai பேட்டி

மேலும் மத்திய அரசுப் பணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மிழ்நாடு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (ஜன.23) உத்தரவிட்டுள்ளார்.

சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக பி.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக எஸ்.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Next Article