Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை!

10:18 PM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரத்த வெள்ளத்தில் கொலை
செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகர்
சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 70 ).ஓய்வு பெற்ற மருந்தாளுனரான இவரது மனைவி
கமலேஸ்வரி வயது 60.இவர்களுக்கு சுகந்தகுமார் (வயது 40) என்ற மகனும் நிஷாந்த்
(வயது 8) என்கிற பேரனும் இருந்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் புகை வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து கதவில் இருந்த பூட்டை உடைத்து போலீசார் அதிரடியாக உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கமலேஸ்வரி, சுதன்குமார்,
நிஷாந்த் ஆகியோர் இறந்து கிடந்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் இறந்த நிலையில் அவரது மனைவி மகன் மற்றும் பேரன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உடல் எரிந்து நிலையில் இறந்தது எதற்காக? என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
CuddaloreMurdernews7 tamilNews7 Tamil UpdatesTamilNadu
Advertisement
Next Article