Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

04:38 PM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

கடந்த ஜூன் 29-ம் தேதி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. இந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டில் மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

இதையடுத்து ஜிம்பாப்வே அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் கலீல் அகமது மற்றும் சாய் சுதர்சன் தொடக்க வீரர்களாக களமிறங்கி உள்ளனர்.

Tags :
2ndBattingIndiaT20 matchTosswonZimbabwe
Advertisement
Next Article