Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘வாழை’ திரைப்படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு - படக்குழு அறிவிப்பு!

09:54 PM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement

‘வாழை’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘ஒரு ஊருல ராஜா’ பாடல் நாளை (29ம் தேதி) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர்  ராம் , பா ரஞ்சித் , சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.

ரெட் ஜயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ‘வாழை’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘ஒரு ஊருல ராஜா’ பாடல் நாளை (29ம் தேதி) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

 

 

Tags :
mari selvarajsanthosh narayanantamil cinemaVaazhai
Advertisement
Next Article