Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

26 வருட அவஸ்தை... மூக்கில் அடைத்திருந்த பிளாஸ்டிக்! நடந்தது என்ன?

09:47 PM Sep 16, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்க இளைஞர் ஒருவர் 6 வயது சிறுவனாக இருந்தபோது மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு, 26 ஆண்டுக்கு பிறகு தானாக வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஆன்டி நார்டன் (32). இவருக்கு 6 வயது இருந்தபோது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பிளாஸ்டிக் வளையம் ஒன்று இவரது மூக்கில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து, அவரது தாயார் கடும் முயற்சி செய்து அதனை அகற்றினார்.

இருப்பினும் பிளாஸ்டிக்கின் ஒரு சிறிய பகுதி உள்ளேயே சிக்கி இருந்தது. இது அவருக்கும், அவரது தாயாருக்கும் தெரியாமேலேயே இருந்தது. அப்போதிலிருந்தே ஆன்டி நார்டனுக்கு சுவாசிப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவர்களை சந்தித்த போது, மூக்கு வழியாக வேகமாக காற்றை வெளியேற்றும்படி மருத்துவர்கள் கூறினர்.

இதனை அடிக்கடி செய்யவும் அறிவுறுத்தி வந்தனர். அதன்படி, தொடர்ச்சியாக ஆன்டி நார்டனும் செய்து சுவாசப் பயிற்சி செய்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த பிளாஸ்டிக் துண்டு வெளியே வந்தது. இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், '' 26 ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் என்னால் நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது. வாசனையை நுகர முடிகிறது'' என தெரிவித்துள்ளார்.

Tags :
AmericaAndi NortonDoctornews7 tamilUSA
Advertisement
Next Article